ஆடைகள் அரைகுறையாய் !
அவன் வார்த்தைகளுக்கோ அதுவுமில்லை !
பெரும் மூட்டைக்குள் கற்கள் பொறுக்கி வைத்திருக்கிறான், அருகில் செல்வோருக்கு ஆளுக்கொன்றாய் நீட்டுகிறான் !
அழுக்கேரி சடை பிடித்த தலைமுடியே கிரீடம் !
எதோ சாதித்த பெருமிதம் எப்போதும் அவன் முகத்தில் !
நிசப்தம் சாத்தியமில்லை என்றான் !
இரைச்சல் மிகுதியென்றான் !
கூடுகளாய் குப்பை சேர்ப்பதாய் பறவைகளைப் பழித்தான் !
அம்புலி வருமுன் ஓடி மறைந்துகொள் என்று சூரியன் காதில் கிசுகிசுத்தான் !
உரக்க கத்தி.....
புதைகுழிக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே.........
வாழ்க்கை உங்களை விழுங்கிக் கொண்டிருப்பதை அறிவீரோ ? என்றான் !
எத்தனை முறை வென்றாலும் கடைசியில் தோற்றுப்போவாய் மரணத்திடம் என்றான் !
சன்னமான குரலில் .............
நிர்வானம் உடலுக்கில்லை என்றான் !
எவரும் திருப்தி அடையா தாரம் பொருளா"தாரம்" என்றான் !
அழுக்கு தாடிக்குள் விரல் சொருகி , வரட்..... வரட்டென சொரிந்தவன் .........
அலறியபடி மீண்டும் சொன்னான்..........
நிசப்தம் சாத்தியமில்லை , இரைச்சல் அதிகம்..........
- ஜீவன் -
அவன் வார்த்தைகளுக்கோ அதுவுமில்லை !
பெரும் மூட்டைக்குள் கற்கள் பொறுக்கி வைத்திருக்கிறான், அருகில் செல்வோருக்கு ஆளுக்கொன்றாய் நீட்டுகிறான் !
அழுக்கேரி சடை பிடித்த தலைமுடியே கிரீடம் !
எதோ சாதித்த பெருமிதம் எப்போதும் அவன் முகத்தில் !
நிசப்தம் சாத்தியமில்லை என்றான் !
இரைச்சல் மிகுதியென்றான் !
கூடுகளாய் குப்பை சேர்ப்பதாய் பறவைகளைப் பழித்தான் !
அம்புலி வருமுன் ஓடி மறைந்துகொள் என்று சூரியன் காதில் கிசுகிசுத்தான் !
உரக்க கத்தி.....
புதைகுழிக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே.........
வாழ்க்கை உங்களை விழுங்கிக் கொண்டிருப்பதை அறிவீரோ ? என்றான் !
எத்தனை முறை வென்றாலும் கடைசியில் தோற்றுப்போவாய் மரணத்திடம் என்றான் !
சன்னமான குரலில் .............
நிர்வானம் உடலுக்கில்லை என்றான் !
எவரும் திருப்தி அடையா தாரம் பொருளா"தாரம்" என்றான் !
அழுக்கு தாடிக்குள் விரல் சொருகி , வரட்..... வரட்டென சொரிந்தவன் .........
அலறியபடி மீண்டும் சொன்னான்..........
நிசப்தம் சாத்தியமில்லை , இரைச்சல் அதிகம்..........
- ஜீவன் -
சூப்பர் மாம்ஸ்... நல்லாருக்கு
ReplyDeleteநன்றிகள் மச்சி
DeleteGOOD WORKS KEEP IT UP
ReplyDeleteயாதுமானவன்.... குறையில்லாதவன்..! வாழ்த்துக்கள்
ReplyDelete”கூடுகளாய் குப்பை சேர்ப்பதாய் பறவைகளைப் பழித்தான்!
ReplyDeleteஅம்புலி வருமுன் ஓடிமறைந்துகொள் என்று சூரியன் காதில் கிசுகிசுத்தான்!”
அருமை! வளர்க!
கமெண்ட்: இன்னும் கொஞ்சம் இண்டென்ஸிட்டியை ஏற்றணும்! :)