பனி இரவு.........
முன் நெற்றியில் சரியும் கற்றை முடி !
பிறை நெற்றியில், முழு நிலாப் பொட்டு !
தேனில் விழுந்த திராட்சை போல, பாதி மூழ்கிய காமக் கண்கள் !
பக்கம் வந்தால் குத்திக் கீறிடும், கத்தியாய் நாசி !
கன்னத்தில் காலூன்றி, காது மடல் கவ்வி, ரகசியம் பேசும் காதணி !
சிலம்பாய் இதழ்கள் !
பரல்களாய் பற்கள்!
உன் கழுத்து உரசியே தங்கமாய் மாறிக்கிடக்கும் சங்கிலி !
முழு முதுகு மறைத்து, பிட்டம் தாண்டிக் குதிக்கும் கருப்பு அருவியாய் கூந்தல் !
சேலையில் அடங்கா அழகு ................. !
வெள்ளைக் கரும்பு கைகள் !
கருப்புச் சேலையின் முந்தானை செருகியே, சிவந்து கிடக்கும் மஞ்சள் இடை !
இணைப் பனை கால்கள் !
நாணம் வரையும் கால் பெரு விரல் !
சற்றே நீளமாய் அடுத்த விரல் !
தனி அறை............................
இத்தனை அழகுடன் கூட்டமாய் நீ !
போர் வீரனாய் தனியே நான் !
மெதுவாய் என் அருகில் வந்தாய்.........................
பிடறி மயிர் பற்றி..........................
ஆவேசமாய் எனை அணைத்த.................. அன்றாவது..................
என் ஆழ்ந்த கனவை கலைக்காமல் இருந்திருக்கலாம் , என் தாத்தாவின்
இருமல் !
ஹா ஹா அருமை மச்சி உறவாடும் பொழுதுகளில் விளையாடும் உறவுகள் பற்றிய நகைச்சுவையுடன கூடிய பதிவு நன்று.. :-))
ReplyDeleteஹி ஹி நன்றி மச்சி
ReplyDeleteநல்ல கற்பனைக் கனவு :-)வர்ணனைகள் அனைத்தும் அருமை..வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி தோழி
ReplyDeleteகவிதையின் உவமைகள் நம்மையும் காதலில் தள்ளின, நன்றாக இருந்தன உவமைகள்,
ReplyDeleteதாத்தாவின் இருமலில் எனது கனவில் இருந்தும் வெளியே வந்து சத்தமிட்டு சிரித்தேன்
வாழ்த்துகள் ஜீவன்
நன்றி மணி
ReplyDelete