Wednesday 7 December 2011

அன்றாவது..........



பனி இரவு.........

முன் நெற்றியில் சரியும் கற்றை முடி !

பிறை நெற்றியில்,  முழு நிலாப் பொட்டு !

தேனில் விழுந்த திராட்சை போல, பாதி மூழ்கிய காமக் கண்கள் !

பக்கம் வந்தால் குத்திக் கீறிடும், கத்தியாய் நாசி !

கன்னத்தில் காலூன்றி, காது மடல் கவ்வி, ரகசியம் பேசும் காதணி !

சிலம்பாய் இதழ்கள்  !

பரல்களாய் பற்கள்!
உன் கழுத்து உரசியே தங்கமாய் மாறிக்கிடக்கும் சங்கிலி !

முழு முதுகு மறைத்து, பிட்டம் தாண்டிக் குதிக்கும் கருப்பு அருவியாய் கூந்தல் !

சேலையில் அடங்கா அழகு ................. !

வெள்ளைக் கரும்பு கைகள் !

கருப்புச் சேலையின் முந்தானை செருகியே, சிவந்து கிடக்கும் மஞ்சள் இடை !

இணைப் பனை கால்கள் !

நாணம் வரையும் கால் பெரு விரல் !

சற்றே நீளமாய் அடுத்த விரல் !

தனி அறை............................

இத்தனை அழகுடன் கூட்டமாய் நீ !

போர் வீரனாய் தனியே நான் !

மெதுவாய் என் அருகில் வந்தாய்.........................

பிடறி மயிர் பற்றி..........................

ஆவேசமாய் எனை அணைத்த.................. அன்றாவது..................

என் ஆழ்ந்த கனவை கலைக்காமல் இருந்திருக்கலாம் , என் தாத்தாவின் 

இருமல் !

6 comments:

  1. ஹா ஹா அருமை மச்சி உறவாடும் பொழுதுகளில் விளையாடும் உறவுகள் பற்றிய நகைச்சுவையுடன கூடிய பதிவு நன்று.. :-))

    ReplyDelete
  2. ஹி ஹி நன்றி மச்சி

    ReplyDelete
  3. நல்ல கற்பனைக் கனவு :-)வர்ணனைகள் அனைத்தும் அருமை..வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நன்றி தோழி

    ReplyDelete
  5. கவிதையின் உவமைகள் நம்மையும் காதலில் தள்ளின, நன்றாக இருந்தன உவமைகள்,

    தாத்தாவின் இருமலில் எனது கனவில் இருந்தும் வெளியே வந்து சத்தமிட்டு சிரித்தேன்

    வாழ்த்துகள் ஜீவன்

    ReplyDelete