Wednesday 27 February 2013

இன்னலே...

என் பயணம் ,
                            வேகமான வாகங்களின் நெடுஞ்சாலை..
பலர் என்னை கடந்து செல்கின்றனர். அது போல் நீயும் கடந்திருப்பாயெனின், கலங்கித் தவித்திருக்கமாட்டேன் நான்.

                          நானா உன்னை என் இமை திறந்து ஆட்கொண்டேன் ?. எப்படி நுழைந்தாய் என்னுள் என் அனுமதியின்றி ?.

                          சூறாவளிகளை வெறும் கைக்குட்டையால் சமாளிக்கும் என்னை, வெறும் தென்றலில் நீ கலங்கடித்தாய் !

                           என்ன மாதிரியான வேதனை அது ... நீ தருவது ?, தவிக்கவும் முடியாமல்... தவிர்க்கவும் முடியாமல் !

                          உன்னோடு என்னால் இருக்க முடியாது. உன் பிரிவு எனக்குச் சம்மதம் மட்டுமல்ல, சந்தோசமும் கூட.

                          இனி எப்போதும் என் கண்ணில் பட்டுவிடாதே..............

                                                                                                                                     தூசியே ! 

- ஜீவன் -



No comments:

Post a Comment